Wednesday, October 30, 2019

வாருங்கள் பொள்ளாச்சியின் அடையாளத்தை மீட்டெடுப்போம் 💐💐💐

பொள்ளாச்சி நகரின் மிகப்பழமையான அடையாளம் ,நம் மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட தெப்பக்குளம் நமது நகரின் நடு மையப்பகுதியில் ,(எப்பொழுது எத்தனை வருடத்திற்கு முன்பு உருவானது என காலகணக்கீடே தெரிய வில்லை)சுமார் 150 வருடத்திற்கும் முற்பட்ட இந்த தெப்பகுளம் இதுவரையில் யாரும் தண்ணீரை முழுமையாக வெளியேற்றி சேறு,சகதிகளை எல்லாம் முழுமையாக எடுத்தது கிடையாது.ஆனால் தற்சமயம் பொள்ளாச்சி நீர் நிலைகள் புனரமைப்பு குழு தன்னுடைய முதல்  சேவை பணியாகவும்,கலப்பணியாகவும் இந்த தெப்பக்குளத்தை முழுமையாக தூர்வாரி பணிகள் நிறைவு பெற்று விட்டது. இதில் மொத்தம் 15 அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள்,மற்றும் சமுதாய அமைப்புகள்,ரசிகர் மன்றங்கள்,தனியார் அமைப்புகள் என அனைவரின் கலப்பணியாலும்,நிதி உதவியாலும்ம்,மூன்று மாதமாக நடைபெற்ற இந்த புனிதமான இறை பணி நிறைவு பெற்று விட்டது .இயந்திரங்களின் வாடகை 5,75,000. இயந்திரங்களின் ஓனர் திரு.பரமேஸ்வரன் அவர்களுக்கு நாம் வசூல் செய்து கொடுத்தது 4,50,000 இன்னும் நாம் 1,25,000 கொடுக்க வேண்டியுள்ளது.பரமேஸ்வரன் அவர்கள் இன்னும் இரண்டு வாரங்களே மீதம் உள்ள 1,25,000 தொகைக்கு அவகாசம் கொடுத்துள்ளார்.ஆகவே அனைவரும் தீவிரமாக நாம் தெரிந்த நபர்களிடம் இந்த புனிதமான சேவையை எடுத்துக்கூறி மீதமுள்ள தொகையை ஸ்ரீ மாரியம்மன் திரு அருளாலும், கருணையினாலும்ம் விரைவாக நிறைவு செய்வோம் நன்றி இயன்றதை செய்வோம், இயற்கைக்கும், இல்லாதவர்க்கும்....

சேவாலயம் என்ற பொது நல அமைப்பின் வங்கிக்கணக்கில் உங்களால் முடிந்த நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
#pollachi #lakerestoration #pondrestoration #pollachitheppakulam #pollachipond #templepond

தொடர்புக்கு
பிரித்திவி ராஜ் :88073 39923
 கார்த்திகேயன் :99444  25242

Account details :
SEVALAYAM TRUST
acc no:823110210000014
IFSC Code: BKID0008231
BANK OF INDIA, POLLACH BRANCH.

வாருங்கள் பொள்ளாச்சியின் அடையாளத்தை மீட்டெடுப்போம் 💐💐💐

No comments:

Post a Comment